follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுஎரிபொருள் விநியோகத்திற்கான முறையான வேலைத்திட்டம் இல்லை - தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

எரிபொருள் விநியோகத்திற்கான முறையான வேலைத்திட்டம் இல்லை – தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

Published on

தனியார் பஸ்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான முறையான திட்டமொன்று இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

பஸ்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்கு முறையான வேலைத்திட்டமொன்று இன்மையால், பஸ் போக்குவரத்தை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை காணப்படுவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை இன்று(21) இயன்றளவு சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், வழமையான நேர அட்டவணையின் படி ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

சுற்றுலாப் பயணிகளுக்கு ‘தேநீர் பரிசு’

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலை நினைவுப் பரிசை வழங்குவதற்கு ஏற்பாடு...

பலியான 6 மாத மழலை : இது யாருடைய தவறு?

உலகில் உள்ள பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை விட விலைமதிப்பற்ற எதுவும் இல்லை. குழந்தைகளுக்காக எதையும் செய்ய பெற்றோர்கள் இருமுறை யோசிப்பதில்லை. ஆனால்...

கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையில்

கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள...