எரிபொருள் விநியோகத்திற்கான முறையான வேலைத்திட்டம் இல்லை – தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

460

தனியார் பஸ்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான முறையான திட்டமொன்று இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

பஸ்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்கு முறையான வேலைத்திட்டமொன்று இன்மையால், பஸ் போக்குவரத்தை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை காணப்படுவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை இன்று(21) இயன்றளவு சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், வழமையான நேர அட்டவணையின் படி ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here