பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ள தம்மிக்க பெரேரா

807

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ள தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தேசியப்பட்டியல் ஊடாக இலங்கையின் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினரானார்.

இதனையடுத்து, அவர் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், நாட்டில் ஏற்பட்ட பாரிய நெருக்கடியையடுத்து, தமது அமைச்சுப் பதவியிலிருந்து தம்மிக்க பெரேரா விலகினார்.

இவ்வாறானதொரு நிலையில், தற்போது, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here