follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுகுழிக்குள் குட்டியுடன் வீழ்த்த தாய் யானை உயிரிழப்பு

குழிக்குள் குட்டியுடன் வீழ்த்த தாய் யானை உயிரிழப்பு

Published on

மஹாகும்புக்கடவல பகுதியில் காட்டு யானையொன்று தனது குட்டியுடன் குழியொன்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதுள்ளதாகவும் குட்டி உயிருடன் இருப்பதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த காட்டுயானை மூன்று நாட்களுக்கு முன்பாக இரவு நேரத்தில் உணவு தேடி கிராமத்திற்குள் உட்புகுந்துள்ள வேளை குழிக்குள் வீழ்ந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் இதன்போது தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த யானைக்கு நிக்கவெரெட்டிய மிருக வைத்தியரினால் பிரேத பரிசோதனை இடம்பெற உள்ள நிலையில் குட்டி யானை உயிருடன் மீட்கப்பட்டு அநுராதபுரம் யானைகள் சரணாலயத்தில் விடுவிக்கப்பட உள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த குறித்த யானை 25 வயது மதிக்கத்தக்கது எனவும் குட்டி யானை 4 மாத வயதை உடையது எனவும் வனஜீவரிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...