follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஒரே இரவில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் கவலையளிக்கின்றன - நியூசிலாந்து

ஒரே இரவில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் கவலையளிக்கின்றன – நியூசிலாந்து

Published on

ஒரே இரவில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் கவலையளிக்கின்றன என நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் கவலை தெரிவித்துள்ளார்.

கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை 27 ஆம் திகதி இன்று அதிகாலை முப்படையினர் அங்கிருந்து அகற்றினர்.

இதையடுத்து நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டார்.

அவர் டுவிட்டரில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“ ஒரே இரவில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் கவலையளிக்கின்றன. பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்டத்திற்கான உரிமை ஆகியவை அனைத்து சுதந்திரமான சமூகங்களின் அடித்தளமாகும். எனவே அவை பாதுகாக்கப்பட வேண்டும் என நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...