follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஅமைதியான போராட்டத்தளம் மீது தாக்குதல் - சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்!

அமைதியான போராட்டத்தளம் மீது தாக்குதல் – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்!

Published on

காலி முகத்திடலில் அமைதியான போராட்டத் தளம் மீது இன்று அதிகாலை காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களை சர்வதேச மன்னிப்புச் சபை கண்டித்துள்ளது.

இதற்கு பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

இத்தகைய வன்முறைச் செயல்களை இலங்கை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுள்ளது.

‘கோட்டாகோகம’விற்கு செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கக் கூடாது எனவும் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறும் சர்வதேச மன்னிப்பு சபை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஊடகவியலாளர்கள் தங்கள் பணியை செய்யவிடாமல் தடுப்பது ஊடகச் சுதந்திரத்தை நேரடியாக மீறுவதாக மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...