follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅமைதியான போராட்டத்தளம் மீது தாக்குதல் - சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்!

அமைதியான போராட்டத்தளம் மீது தாக்குதல் – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்!

Published on

காலி முகத்திடலில் அமைதியான போராட்டத் தளம் மீது இன்று அதிகாலை காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களை சர்வதேச மன்னிப்புச் சபை கண்டித்துள்ளது.

இதற்கு பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

இத்தகைய வன்முறைச் செயல்களை இலங்கை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுள்ளது.

‘கோட்டாகோகம’விற்கு செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கக் கூடாது எனவும் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறும் சர்வதேச மன்னிப்பு சபை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஊடகவியலாளர்கள் தங்கள் பணியை செய்யவிடாமல் தடுப்பது ஊடகச் சுதந்திரத்தை நேரடியாக மீறுவதாக மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...