ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்

562

காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் வெளியிட்டுள்ளது.

இவ்வாறான தாக்குதல்கள் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக சுட்டிக்காட்டியு;ள ஆணைக்குழு , இதனுடன் தொடர்புடையவர்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது.

மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு அரச நிர்வாகத்தில் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படாமலிருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here