follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இழந்துவிட வேண்டாம் - ஐரோப்பிய ஒன்றியம்

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இழந்துவிட வேண்டாம் – ஐரோப்பிய ஒன்றியம்

Published on

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்ட உடன்படிக்கைகளை முழுமையாக பாதுகாத்துக் கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திடம் அறிவித்துள்ளது.

நேற்று காலை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து இலங்கையில் பொருளாதார மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக தம்மை தொடர்ந்தும் அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளது.

அமைதியாக ஒன்றுகூடுவதற்கும் பேச்சு சுதந்திரத்திற்குமான பொதுமக்களின் உரிமையை உறுதிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி கொள்கைகளை பாதுகாப்பதற்கும் நிலையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த சில வருடங்களில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 01 பில்லியன் யூரோக்கள் உதவி வழங்கியுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...