follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபாராளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சி கோரிக்கை

பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சி கோரிக்கை

Published on

அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து விவாதம் நடத்துவதற்காக 25 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமரிடம் எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சி பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு கடிதம் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கோட்டாகோகமயில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அடக்குமுறை தாக்குதலும் தாக்குதல் நடத்தப்பட்ட விதமும் ஜனநாயகத்திற்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு சர்வதேச சமூகமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமை,  இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமடையச் செய்யும் என தெரிவித்துள்ள  லக்ஷ்மன் கிரியெல்ல,  எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...