follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்ஈரானில் வெள்ளம்! 22 பேர் பலி; 6 பேர் மாயம்!

ஈரானில் வெள்ளம்! 22 பேர் பலி; 6 பேர் மாயம்!

Published on

ஈரானில் பல ஆண்டுகளாக வறட்சியை சந்தித்து வந்த தெற்கு பராஸ் மாகாணத்தில் பருவ நிலை மாற்றத்தின் விளைவாக நேற்று முன்தினம் திடீரென அதிக மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது.

அதன்காரணமாக அந்த மாகாணத்தின் எஸ்தாபன் நகரில் உள்ள நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஊர்களுக்குள் வெள்ளநீர் பரவியுள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்திற்கும் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் வெள்ளத்தால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் மாயமாகி உள்ளதாகவும் பராஸ் மாகாணத்தின் ஆளுநர் யூசுப் கரேகர் தெரிவித்துள்ளார். வெள்ளத்தில் சிக்கிய பலர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...