follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபொலிஸாரை தாக்கிய நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலி!

பொலிஸாரை தாக்கிய நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலி!

Published on

முறைப்பாடு ஒன்றினை விசாரிக்கசென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

நேற்று பிடிகல, தலகஸ்பே மஹேன பகுதிக்கு முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை குறித்த சந்தேகநபர் தாக்கி காயப்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பிடிகல பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்றிருந்தனர். இதன்போது சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் தலகஸ்பே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபருக்கு எதிராக 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை, நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்தமை ஆகிய குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...