follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுஜனாதிபதி மாளிகையில் திருடப்பட்ட பொருட்களுடன் 3 பேர் கைது

ஜனாதிபதி மாளிகையில் திருடப்பட்ட பொருட்களுடன் 3 பேர் கைது

Published on

ஜனாதிபதி மாளிகையில் இருந்து திருடப்பட்ட பழங்கால பொருட்களுடன் 3 சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மக்கள் எழுச்சிப் போராட்டத்தையடுத்து ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையின் ஜன்னல்களில் பொருத்தப்பட்டிருந்த பித்தளையால் செய்யப்பட்ட 40 பந்து வடிவிலான உருண்டைகளை திருடிய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திருடப்பட்ட 40 பித்தளை உருண்டைகள் நேற்றையதினம் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவருக்கு விற்க முயன்றபோதே குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டதுடன் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன

LATEST NEWS

MORE ARTICLES

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு – வருடத்திற்கு 16.6 பில்லியன் ரூபா செலவு

பகல் உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் 100ற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின்...

கொழும்பில் வெப்பநிலையை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

கொழும்பு நகரில் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் வகையில், வழித்தடங்களில் கற்களுக்கு பதிலாக சிறிய செடிகளை வளர்க்கும் திட்டத்தை கொழும்பு மாநகர...

ஆள் கடத்தலுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டம் அமுல்படுத்தப்படும்

ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு...