follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுராஜபக்ஷக்களை போல ரணிலையும் மக்கள் துரத்துவார்கள் - அநுரகுமார

ராஜபக்ஷக்களை போல ரணிலையும் மக்கள் துரத்துவார்கள் – அநுரகுமார

Published on

ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரணில் வீடு செல்ல வேண்டும் என்பதே மக்களின் தற்போதைய கோரிக்கை என தெரிவித்த அவர், எனவே மக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்றார்.

காலி முகத்திடலில் மக்களே போராடினர். இன்றும் மக்கள் தான் போராடி வருகின்றனர். ஆனால் அமைதியாக போராடும் மக்களை போராட்டக்காரர்கள் என தெரிவித்து, அவர்களை தாக்குவதற்கு இராணுவத்தினருக்கு புதிய ஜனாதிபதி உத்தரவிடுகின்றமை கீழ்த்தரமான செயற்பாடு என்றார்.

இதனால் அங்கு போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் கோபம் அதிகரிக்கும் என்று கூறினால் அது தவறாகாது.

எனவே புதிய ஜனாதிபதி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அவ்வாறு மக்களின் கோரிக்கையை அவர் ஏற்காவிடின் ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி ராஜபக்ஷக்களை போலவே ரணிலையும் மக்கள் துரத்துவார்கள் என்றார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...