follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநாடாளுமன்றில் புதிய நியமனங்களை வழங்கிய பிரதமர்!

நாடாளுமன்றில் புதிய நியமனங்களை வழங்கிய பிரதமர்!

Published on

பாராளுமன்ற ஆளும் கட்சியின் பிரதி முதற்கோலாசான்கள் மற்றும் உதவி முதற்கோலாசான்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து நேற்று (27) வழங்கப்பட்டன.

அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) சாகர காரியவசம் மற்றும் ஜயந்த கெட்டகொட ஆகியோர் பிரதி முதற்கோலாசான்களாகவும், கோகிலா குணவர்தன, மதுர விதானகே மற்றும் திஸகுட்டி ஆரச்சி ஆகியோர் உதவி முதற்கோலாசான்களாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடமிருந்து உரிய நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆளும்கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஆளும் கட்சி முதற்கோலாசானின் செயலாளரும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருமான சட்டத்தரணி சமிந்த குலரத்ன மற்றும் சபை முதல்வரின் செயலாளரும் பிரதமரின் மேலதிக செயலாளருமான ஹர்ஷ விஜேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

No description available.

No description available.

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...