follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஹைகோர்ட் ராஜா மற்றும் ரொபின் கைது

ஹைகோர்ட் ராஜா மற்றும் ரொபின் கைது

Published on

கிம்புல அலே குணா´ வின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வந்த இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 06 கிலோ 440 கிராம் கேரள கஞ்சா, 05 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட எம் 67 கைக்குண்டு என்பவற்றையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கொழும்பு 15, மாதம்பிட்டிய வீதியைச் சேர்ந்த 45 வயதான ஹைகோர்ட் ராஜா என அழைக்கப்படும் அங்கமுத்துராஜா மற்றும் 32 வயதான நாகராஜா ரொபின் நிக்லஸ் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...