follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉலகம்பாலியல் நோக்கத்துடனான வன்முறைகள் அவுஸ்திரேலியாவில் அதிகரிப்பு

பாலியல் நோக்கத்துடனான வன்முறைகள் அவுஸ்திரேலியாவில் அதிகரிப்பு

Published on

அவுஸ்திரேலியாவில் பாலியல்நோக்கத்துடனான தாக்குதல்கள் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன என அவுஸ்திரேலிய புள்ளிவிபர பணியகம் தெரிவித்துள்ளது.

2021 இல் 31,000 பேர் பாலியல் நோக்கதுடனான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் என பதிவாகியுள்ளது என புள்ளிவிபர பணியகம் தெரிவித்துள்ளது.

ஒரு வருடகாலப்பகுதியில் இத்தகைய குற்றங்கள் 13 வீதம் அதிகரித்துள்ளன, இத்தகைய குற்றங்கள் மாத்திரம்  கடந்த வருடம் அதிகரித்துள்ளன என புள்ளிவிபர பணியகம் தெரிவித்துள்ளது.

பாலியல் நோக்கத்துடனான வன்முறைகளை எதிர்கொண்டவர்களில் 87 வீதமானவர்கள் அது குறித்து முறைப்பாடு செய்யவில்லை இதன் காரணமாக உண்மையான எண்ணிக்கை அதிகமாகயிருக்கலாம் எனவும் புள்ளிவிபர பணியகம் தெரிவித்துள்ளது.

ஆண்கள் தங்கள் சகாக்களை வாழ்க்கை துணையை தாக்குவது அதிகமாக காணப்படுகின்றது என பாலியல் வன்முறை தொடர்பான முன்னிலை பணியாளரான டாரா ஹன்டர் தெரிவித்துள்ளார்.

37 வீதமான சம்பவங்கள் வீடுகளில் இடம்பெற்றுள்ளனஎன குறிப்பிட்டுள்ள அவர் தனிப்பட்ட உறவுகளின் சூழமைவின் அடிப்படையில் இவை இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்ற தென்னாப்பிரிக்கா

ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு...

சிங்கப்பூர் புதிய பிரதமராக லாரன்ஸ் வோங் பொறுப்பேற்பு

சிங்கப்பூரின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணா் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) நேற்று (16) பொறுப்பேற்றுக்கொண்டாா். சுமாா் 20 ஆண்டுகளாக...

சீ ஜின்பிங் உடனான மூலோபாய உறவுகளை ஆழப்படுத்த புடின் சீனாவுக்கு விஜயம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று காலை பெய்ஜிங் சென்றடைந்தார். இது அமெரிக்காவின் இரண்டு சக்திவாய்ந்த புவிசார் அரசியல் போட்டியாளர்களுக்கு...