follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஒமிக்ரோன் உப பிறழ்வு தொடர்பில் எச்சரிக்கை!

ஒமிக்ரோன் உப பிறழ்வு தொடர்பில் எச்சரிக்கை!

Published on

வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் பிஏ 5 எனப்படும் கொரோனா வைரஸ் உப பிறழ்வு இலங்கையில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.வேகமாகப் பரவிவரும் இந்த பிறழ்வினால், எதிர்காலத்தில் நாட்டில் மோசமான நிலைமை ஏற்படக் கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

உலகில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வகை இதுவாகும் எனக் குறிப்பிட்ட அவர், இதன் காரணமாக இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக கொழும்பை சூழவுள்ள பிரதேசங்களில் இந்த பிறழ்வு காணப்படுவதாகவும் இந்த நிலைமையை கருத்தில் கொண்டு மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கவனமாக செயற்படுவது மிகவும் அவசியமானது என்றும் குறிப்பிட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...