கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு

443

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

02 ஆண்களும் 01 பெண்ணும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை  16,485 ஆக அதிகரித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 02 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டோரில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 83 ஆக பதிவாகியுள்ளது.

அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 665,543 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here