follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுமற்றுமொரு எரிவாயு கப்பல் வருகின்றது – லிட்ரோ

மற்றுமொரு எரிவாயு கப்பல் வருகின்றது – லிட்ரோ

Published on

மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று (31) இரவு நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்ததாகவும், தரையிறங்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பல்வேறு பகுதிகளில் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்கான வரிசை முறை முடிவுக்கு வந்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்ச்சியான எரிவாயு விநியோகத்திற்காக ஒரு இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் 20 லட்சத்துக்கும் அதிகமான சமையல் எரிவாயு கொள்கலன்களை இந்த மாதத்தில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மக்களுக்கு தொடர்ந்தும் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் தெரிவித்துள்ளது.

 

 

 

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...