follow the truth

follow the truth

April, 29, 2025
Homeஉள்நாடுஎரிபொருள் சோதனை சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 1,086 சந்தேக நபர்கள் கைது

எரிபொருள் சோதனை சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 1,086 சந்தேக நபர்கள் கைது

Published on

நாட்டில் இதுவரை  மேற்கொள்ளப்பட்ட 1,164 எரிபொருள் சோதனை சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்  போது, 1,086 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

மேலும், குறித்த எரிபொருள் சோதனை நடவடிக்கையில், 37,296 லீற்றர் பெற்றோல், 119,457 லீற்றர் டீசல் மற்றும் 19,214 லீற்றர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சிலர் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமான முறையில் எரிபொருளைக் பதுக்கிவைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதுபோன்ற சம்பவங்கள் மீதான சோதனைகள் தொடரும், என்றும் இதுபோன்ற அனைத்து சம்பவங்கள் குறித்து காவல்துறை விழிப்புடன் செயற்படுமென அவர் மேலும் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...