follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஎரிபொருள் சோதனை சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 1,086 சந்தேக நபர்கள் கைது

எரிபொருள் சோதனை சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 1,086 சந்தேக நபர்கள் கைது

Published on

நாட்டில் இதுவரை  மேற்கொள்ளப்பட்ட 1,164 எரிபொருள் சோதனை சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்  போது, 1,086 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

மேலும், குறித்த எரிபொருள் சோதனை நடவடிக்கையில், 37,296 லீற்றர் பெற்றோல், 119,457 லீற்றர் டீசல் மற்றும் 19,214 லீற்றர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சிலர் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமான முறையில் எரிபொருளைக் பதுக்கிவைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதுபோன்ற சம்பவங்கள் மீதான சோதனைகள் தொடரும், என்றும் இதுபோன்ற அனைத்து சம்பவங்கள் குறித்து காவல்துறை விழிப்புடன் செயற்படுமென அவர் மேலும் கூறினார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...