நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 1,164 எரிபொருள் சோதனை சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 1,086 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
மேலும், குறித்த எரிபொருள் சோதனை நடவடிக்கையில், 37,296 லீற்றர் பெற்றோல், 119,457 லீற்றர் டீசல் மற்றும் 19,214 லீற்றர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சிலர் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமான முறையில் எரிபொருளைக் பதுக்கிவைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
இதுபோன்ற சம்பவங்கள் மீதான சோதனைகள் தொடரும், என்றும் இதுபோன்ற அனைத்து சம்பவங்கள் குறித்து காவல்துறை விழிப்புடன் செயற்படுமென அவர் மேலும் கூறினார்.