வெளிநாட்டு தபால் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சர்வதேச அஞ்சல் கட்டணங்கள் 2018 டொலர் வீதத்தை அடிப்படையாகக் கொண்டவை எனவும், தற்போது டொலர் வீதம் பாரியளவில் அதிகரித்துள்ளதால் கட்டணங்கள் திருத்தம் செய்யப்படுவதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச பதிவு செய்யப்பட்ட தபால் கட்டணங்களும் இன்று முதல் திருத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.