follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி வீட்டுக்கு தீ வைத்த முக்கிய சந்தேகநபர் கைது

ஜனாதிபதி வீட்டுக்கு தீ வைத்த முக்கிய சந்தேகநபர் கைது

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்ட 3 பேரில் பிரதான சந்தேக நபரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜூலை 9 ஆம் திகதி பிளெவர் வீதியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு அருகில் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் தீவிரமடைந்தபோது கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டபோது அடையாளம் தெரியாத கும்பல் அவரது வீட்டிற்கு தீ வைத்து சில பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

பின்னர் வீட்டிற்கு தீ வைத்தவர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடிஇருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...