ஜனாதிபதி வீட்டுக்கு தீ வைத்த முக்கிய சந்தேகநபர் கைது

991

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்ட 3 பேரில் பிரதான சந்தேக நபரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜூலை 9 ஆம் திகதி பிளெவர் வீதியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு அருகில் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் தீவிரமடைந்தபோது கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டபோது அடையாளம் தெரியாத கும்பல் அவரது வீட்டிற்கு தீ வைத்து சில பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

பின்னர் வீட்டிற்கு தீ வைத்தவர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடிஇருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here