ரொமேஷ் லியனகேவிற்கு இடமாற்றம் வழங்குமாறு பரிந்துரை

620

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பொலிஸ் விசாரணை நிறைவு பெறும் வரை, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகேவிற்கு கொழும்பிற்கு வெளியில் இடமாற்றம் வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரையை உடனடியாக அமுல்படுத்துவது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றினூடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here