follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி இல்லத்தில் இருந்த பீர் குவளையை எடுத்து சென்ற நபர் கைது

ஜனாதிபதி இல்லத்தில் இருந்த பீர் குவளையை எடுத்து சென்ற நபர் கைது

Published on

ஜூலை 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது, ​​கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து பீர் குவளையை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

ரங்கம பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான சந்தேக நபர் மேலும் இரு நண்பர்களுடன் ஜூலை 09ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டதாகவும், எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்ட ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர், ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்த பீர் போத்தலைக் கைப்பற்றிய குழுவினர், அந்த வளாகத்தில் இருந்த பீர் குவளைகளை பயன்படுத்தி மது அருந்தினர்.

சந்தேக நபர் பீர் குவளையை நினைவுப் பொருளாக மீண்டும் தனது வீட்டிற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

அந்த நபர் ஜனாதிபதியின் வீட்டில் தனது நண்பர்களுடன் பீர் குவளையுடன் இருந்த புகைப்படத்தை தனது தனிப்பட்ட முகநூல் கணக்கில் பகிர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற போராட்டங்கள் தொடர்பான பேஸ்புக் உள்ளடக்கம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் வீட்டிற்கு சட்டவிரோதமாக பிரவேசித்தமை மற்றும் பொருட்களை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், குறித்த பீர் குவளையை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...