follow the truth

follow the truth

August, 1, 2025
Homeஉள்நாடுஇ.போ.சபை ஊடாக எரிபொருள் வழங்குவது குறித்து உயர் நீதிமன்றின் உத்தரவு

இ.போ.சபை ஊடாக எரிபொருள் வழங்குவது குறித்து உயர் நீதிமன்றின் உத்தரவு

Published on

இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேலும் நெறிப்படுத்துவது அவசியமானது என உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, மக்களுக்கு தேவையான எரிபொருள், மின்சாரம், உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு முறையான சேலைத்திட்டமொன்றை வகுக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை ஆராய்ந்த போதே உயர்நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட இதனைக் குறிப்பிட்டார்.

விஜித் மல்லல்கொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கான மேலதிக யோசனைகள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை நாளை மறுதினம் (07) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதன்போது உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...