follow the truth

follow the truth

August, 23, 2025
Homeஉள்நாடுLGBTQ சமூகத்தின் பிரச்சனைகளை தீர்க்க ஜனாதிபதி பணிப்பு!

LGBTQ சமூகத்தின் பிரச்சனைகளை தீர்க்க ஜனாதிபதி பணிப்பு!

Published on

நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் காரணமாக நாட்டின் LGBT சமூகம் சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக தனக்கு அறியக் கிடைத்துள்ளதாகவும், அவற்றை தீர்க்க தேவையான சட்ட ஒழுங்குகளை தயாரிக்க சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட தரப்பினருக்கும் இடையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவசரகால நிலையை முடிந்தவரை விரைவில் நீக்குவது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு முக்கியமாக இருப்பதாகவும், நாட்டின் நிர்வாகத்திலும் அதன் தாக்கம் இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...