நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் காரணமாக நாட்டின் LGBT சமூகம் சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக தனக்கு அறியக் கிடைத்துள்ளதாகவும், அவற்றை தீர்க்க தேவையான சட்ட ஒழுங்குகளை தயாரிக்க சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட தரப்பினருக்கும் இடையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவசரகால நிலையை முடிந்தவரை விரைவில் நீக்குவது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு முக்கியமாக இருப்பதாகவும், நாட்டின் நிர்வாகத்திலும் அதன் தாக்கம் இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.