பாலஸ்தீனத்தின் காசா நகர பகுதிகள் மீது நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 5 வயது குழந்தையும், 23 வயது யுவதியொருவரும் அடங்குவதாக பலஸ்தீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த தாக்குதலில் குறைந்தது 15 போராளிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டமிட்டிருந்ததாகவும் அந்த தாக்குதலை முறியடிக்க பயங்கரவாதிகள் தங்கி இருந்த பகுதியில் வான்வெளி தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் தற்போது பிரதமராக உள்ள யாயிர் லபிட் தனது பலத்தை நிரூபிக்க இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.