முல்லைத்தீவு பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கள்ளப்பாடு தெற்கை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரும், 21 வயதுடைய உண்ணாப்பிளவு வடக்கினை சேர்ந்த இளைஞர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒருவரிடம் இருந்து 5 கிராமும், மற்றவரிடம் 4 கிராமும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் முல்லைத்தீவு பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.