நாட்டின் 10 மாவட்டங்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன!

599

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 10 மாவட்டங்களைச் சேரந்த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுக்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றி நடக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்கள் ஏதும் நிகழுமாயின் 117 என்ற துரித இலக்கத்தத்தினூடாக குறித்த நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here