பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை தற்போது கிடையாது

656

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை தற்போது கிடையாது என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று(08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை காணப்படுமாக இருந்தால், அதற்கான அனுமதியை வழங்க முடியும் எனவும் அவ்வாறான சூழ்நிலை தற்போது கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது, கல்வி அதிகாரிகளின் பொறுப்பு எனவும், அந்த சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here