follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடு2 மாதங்களில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

2 மாதங்களில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

Published on

நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில்  இடம் பெற்ற 21 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  நிஹால் தல்துவ இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 21 துப்பாக்கிச்  சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன . இதன்போது துப்பாக்கி சூட்டுக்கு இழக்காகி இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களால் இந்த துப்பாக்கிப்  பிரயோகம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது துப்பாக்கிசூட்டுக்கு  இழக்காகி உயிரிழந்தவர்கள் அதனுடன் தொடர்புடையவர்களாவர்.

மேலும், வெளிநாடுகளில் தங்கியிருக்கும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கலின் பின்னணியில்  இந்த துப்பாக்கி பிரயோகம்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதுவரையில் சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும்,  இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் பொலிஸ் தலைமையகம் ஊடாக அனைத்து மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...