follow the truth

follow the truth

August, 1, 2025
Homeஉள்நாடு2 மாதங்களில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

2 மாதங்களில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

Published on

நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில்  இடம் பெற்ற 21 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  நிஹால் தல்துவ இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 21 துப்பாக்கிச்  சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன . இதன்போது துப்பாக்கி சூட்டுக்கு இழக்காகி இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களால் இந்த துப்பாக்கிப்  பிரயோகம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது துப்பாக்கிசூட்டுக்கு  இழக்காகி உயிரிழந்தவர்கள் அதனுடன் தொடர்புடையவர்களாவர்.

மேலும், வெளிநாடுகளில் தங்கியிருக்கும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கலின் பின்னணியில்  இந்த துப்பாக்கி பிரயோகம்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதுவரையில் சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும்,  இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் பொலிஸ் தலைமையகம் ஊடாக அனைத்து மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...