follow the truth

follow the truth

August, 1, 2025
Homeஉள்நாடுகடன் வசதியை இடைநிறுத்தியது சீனாவின் எக்ஸிம் வங்கி!

கடன் வசதியை இடைநிறுத்தியது சீனாவின் எக்ஸிம் வங்கி!

Published on

இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட கடன் வசதியை சீனாவின் எக்ஸிம் வங்கி இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தும் முடிவு ஆகியவை இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட 51 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை சீனாவின் எக்ஸிம் வங்கி இடைநிறுத்தியுள்ளது.

இதனால் சுமார் 2000 வேலைகள் இழக்கும் அபாயத்தை இலங்கையர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கடவத்தைக்கும் மீரிகமவுக்கும் இடையிலான 37 கிலோமீற்றர் நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தில் பணிபுரிந்த சுமார் 500 சீன பிரஜைகள் ஏற்கனவே வெளியேறத் தொடங்கியுள்ள தெரிவிக்கப்படுகின்து.

கடன் வசதி நிறுத்தப்பட்டதால், திட்டம் தாமதமாகும் என்றும், இதன் காரணமாக திட்டத்திற்கு பொறுப்பான ஒப்பந்ததாரர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தகவலால் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதும் இடைநிறுத்தப்பட்டுள்ள கடன் வசதியை மீள ஆரம்பிப்பது தொடர்பாக சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...