follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1ஆளும் கட்சியின் விசேட கூட்டம் இன்றிரவு

ஆளும் கட்சியின் விசேட கூட்டம் இன்றிரவு

Published on

ஆளும் கட்சியின் விசேட கூட்டம் ஒன்று இன்று இரவு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இரவு 7மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, நாளை ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வு மற்றும், அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் என்பன தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பல நாட்களாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஒவ்வொரு கட்சியும் முன்வைத்த முன்மொழிவுகள் கலந்துரையாடலில் பங்குபற்றிய அனைத்துக் கட்சிகளுக்கும் இன்று பொதுவாக வழங்கப்படவுள்ளது.

கடந்த நாட்களில் சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி, வௌ;வேறு அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடலை நடத்தியிருந்தார்.

இதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைக்கு, 11 சுயாதீன கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...