பாதாள குழு உறுப்பினர் கற்குவாரியில் வீழ்ந்து உயிரிழப்பு

504

பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய துவான் சிரார், கடுவெல-கொரத்தொட்ட பகுதியில் ஆயுதம் தேடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது கற்குவாரி ஒன்றில் வீழ்ந்து மரணமடைந்துள்ளார் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடவத்தை-இஹல பியன்வில பகுதியைச் சேர்ந்த துவான் சிரார் என்ற 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் அங்கொட லொக்கா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் நெருங்கிய உறவினர் என்பதும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here