follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஉரிய நேரத்தில் தீர்வு கிடைக்காத கல்வியால் மாணவர்கள் மத்தியில் அமைதியின்மை! - சஜித்

உரிய நேரத்தில் தீர்வு கிடைக்காத கல்வியால் மாணவர்கள் மத்தியில் அமைதியின்மை! – சஜித்

Published on

கடந்த இரண்டு வருடங்களாக இலங்கையில் பாடசாலை மாணவர்களின் கல்விக்கு பாரிய இடையூறுகள் ஏற்பட்ட காலப்பிரிவாகும் எனவும், சுமார் ஒன்றரை வருடங்களக நீடித்த கோவிட் தொற்று, போக்குவரத்து நெருக்கடி மற்றும் ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் உரிய நேரத்தில் தீர்க்கப்படாமை போன்ற காரணங்களால், சில காலம் பாடசாலைகளை மூட வேண்டியிருந்ததால் அனைத்து தர பாடசாலை மாணவர்களாலும் தங்கள் பாடத்திட்டத்தை சரியாக பூர்த்தி செய்ய முடியவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பல பருவ கால பரீட்சைகளை நடத்தாமை, பிரயோக பயிற்சி பரீட்சைகள் தடைபடல்,இணைய கல்வி மூலம் மேலும் கல்வி ஏற்றத்தாழ்வு அதிகரித்தல் போன்றன கல்வித்துறையில் நெருக்கடி தீவிரமடைய காரணமாக அமைந்துள்ளதால் இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர (உயர்தர) பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்கள் இப்பிரச்சினைகளால் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நிலைமையால் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய(09) பாராளுமன்ற அமர்வில் 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பினார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...