follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுசனிக்கிழமை முதல் பதுளைக்கு புதிய சொகுசு ரயில்

சனிக்கிழமை முதல் பதுளைக்கு புதிய சொகுசு ரயில்

Published on

கொழும்பு மற்றும் பதுளைக்கான நகரங்களுக்கு இடையிலான அரை சொகுசு தொடருந்து சேவை ஒன்று எதிர்வரும் வார இறுதி முதல் போக்குவரத்தில் ஈடுபடவுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் ஆலோசனைக்கமைய இந்த தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி பிரதி சனிக்கிழமைகளில் காலை 5.30க்கு கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்படவுள்ளது.

கம்பஹா, வெயங்கொடை, பொல்கஹவெல, ரம்புக்கனை, பேராதனை, கண்டி, நாவலப்பிட்டி, நானுஓயா, ஹப்புத்தளை, தியத்தலாவ பண்டாரவளை, எல்ல மற்றும் பதுளை ஆகிய தொடருந்து நிலையங்களில் குறித்த தொடருந்து நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பதுளையில் இருந்து முற்பகல் 9.50 அளவில் கொழும்பு – கோட்டைதொடருந்து நிலையத்தை நோக்கி பயணிக்கவுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...