கொழும்பு மற்றும் பதுளைக்கான நகரங்களுக்கு இடையிலான அரை சொகுசு தொடருந்து சேவை ஒன்று எதிர்வரும் வார இறுதி முதல் போக்குவரத்தில் ஈடுபடவுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் ஆலோசனைக்கமைய இந்த தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி பிரதி சனிக்கிழமைகளில் காலை 5.30க்கு கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்படவுள்ளது.
கம்பஹா, வெயங்கொடை, பொல்கஹவெல, ரம்புக்கனை, பேராதனை, கண்டி, நாவலப்பிட்டி, நானுஓயா, ஹப்புத்தளை, தியத்தலாவ பண்டாரவளை, எல்ல மற்றும் பதுளை ஆகிய தொடருந்து நிலையங்களில் குறித்த தொடருந்து நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பதுளையில் இருந்து முற்பகல் 9.50 அளவில் கொழும்பு – கோட்டைதொடருந்து நிலையத்தை நோக்கி பயணிக்கவுள்ளது.