follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகண்ணீர் புகை குண்டுடன் ஒருவர் கைது

கண்ணீர் புகை குண்டுடன் ஒருவர் கைது

Published on

வெலிக்கடை, மாளிகாவ மாவத்தை பகுதியில் கண்ணீர் புகை குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரின் முச்சக்கர வண்டியில் இருந்து காணாமல்போன கண்ணீர் புகை குண்டுகளில் ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று (10) மாலை சந்தேகநபர் கண்ணீர் புகை குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்தரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்று (11) அளுத்கடை நீதவான் நீதிமன்ற இலக்கம் 4 முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...