follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஜப்பானுக்கான புதிய தூதுவராக ரொட்னி பெரேராவை நியமிக்க பரிந்துரை

ஜப்பானுக்கான புதிய தூதுவராக ரொட்னி பெரேராவை நியமிக்க பரிந்துரை

Published on

முன்னாள் அமைச்சர் போல் பெரேராவின் மகன் ரொட்னி பெரேராவை, ஜப்பானிய தூதுவராக நியமிக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பானின் இலகு தொடரூந்து திட்டம் ரத்து செய்யப்பட்டமையை அடுத்து, தகர்ந்துப்போயுள்ள ஜப்பானுடனான ராஜதந்திர உறவை மேம்படுத்தும் வகையிலேயே இந்த நியமனம் அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே டோக்கியோவுக்கான தூதுவராக கடற்படையின் முன்னாள் அதிகாரியும் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளருமான, அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.

எனினும் ஜப்பானுடனான உறவை பலப்படுத்த, படையதிகாரி ஒருவரின் நியமனம் பொருத்தமற்றது என்ற அடிப்படையில், ரொட்னி பெரேராவின் பெயர், ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ரொட்னி பெரேரா ஏற்கனவே இலங்கையின் தூதுவராக வோஷிங்டனில் பணியாற்றினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...