follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஜப்பானுக்கான புதிய தூதுவராக ரொட்னி பெரேராவை நியமிக்க பரிந்துரை

ஜப்பானுக்கான புதிய தூதுவராக ரொட்னி பெரேராவை நியமிக்க பரிந்துரை

Published on

முன்னாள் அமைச்சர் போல் பெரேராவின் மகன் ரொட்னி பெரேராவை, ஜப்பானிய தூதுவராக நியமிக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பானின் இலகு தொடரூந்து திட்டம் ரத்து செய்யப்பட்டமையை அடுத்து, தகர்ந்துப்போயுள்ள ஜப்பானுடனான ராஜதந்திர உறவை மேம்படுத்தும் வகையிலேயே இந்த நியமனம் அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே டோக்கியோவுக்கான தூதுவராக கடற்படையின் முன்னாள் அதிகாரியும் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளருமான, அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.

எனினும் ஜப்பானுடனான உறவை பலப்படுத்த, படையதிகாரி ஒருவரின் நியமனம் பொருத்தமற்றது என்ற அடிப்படையில், ரொட்னி பெரேராவின் பெயர், ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ரொட்னி பெரேரா ஏற்கனவே இலங்கையின் தூதுவராக வோஷிங்டனில் பணியாற்றினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...