follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஜப்பானுக்கான புதிய தூதுவராக ரொட்னி பெரேராவை நியமிக்க பரிந்துரை

ஜப்பானுக்கான புதிய தூதுவராக ரொட்னி பெரேராவை நியமிக்க பரிந்துரை

Published on

முன்னாள் அமைச்சர் போல் பெரேராவின் மகன் ரொட்னி பெரேராவை, ஜப்பானிய தூதுவராக நியமிக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பானின் இலகு தொடரூந்து திட்டம் ரத்து செய்யப்பட்டமையை அடுத்து, தகர்ந்துப்போயுள்ள ஜப்பானுடனான ராஜதந்திர உறவை மேம்படுத்தும் வகையிலேயே இந்த நியமனம் அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே டோக்கியோவுக்கான தூதுவராக கடற்படையின் முன்னாள் அதிகாரியும் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளருமான, அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.

எனினும் ஜப்பானுடனான உறவை பலப்படுத்த, படையதிகாரி ஒருவரின் நியமனம் பொருத்தமற்றது என்ற அடிப்படையில், ரொட்னி பெரேராவின் பெயர், ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ரொட்னி பெரேரா ஏற்கனவே இலங்கையின் தூதுவராக வோஷிங்டனில் பணியாற்றினார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...