அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை செலுத்தும்போது, சலுகைகளுக்கு தகுதியான குழுக்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தற்போது அவதானம் செலுத்தி வருவதாக சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
குறிப்பாக குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின்சார கட்டணம் தொடர்பாக சில சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.