follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஅவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை - ஹர்ஷ டி சில்வா

அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை – ஹர்ஷ டி சில்வா

Published on

நம்பிக்கை இல்லாத மற்றும் சர்வதேச பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத அரசாங்கத்தால்எவ்வாறு பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியும் என ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இந்த கேள்வியை எழுப்பினார்.

மக்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதால் பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்த, அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

இவ்வாறான கூற்றின் பின்னணியில் உள்ள அர்த்தம் குறித்து கேள்வியெழுப்பிய ஹர்ஷ டி சில்வா, பொருளாதார சீர்திருத்தங்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளத் தவறினால் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது என்றார்.

பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பதே பொருத்தமான தீர்வு என்றும் ஆகவே உண்மையை வெளிக்கொண்டு வந்து அவர்களின் ஆதரவைப் பெற்று இணைந்து செயற்படுமாறும் ஜனாதிபதியிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...