follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடு'கோட்டா கோ கம' வில் எஞ்சியிருந்த கூடாரங்களும் அகற்றப்பட்டன

‘கோட்டா கோ கம’ வில் எஞ்சியிருந்த கூடாரங்களும் அகற்றப்பட்டன

Published on

கொழும்பு, காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தில் எஞ்சியிருந்த கூடாரங்கள் அனைத்தையும் பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினர் இணைந்து அகற்றியுள்ளனர்.

கொழும்பு, காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’வில் இருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் கடந்த 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்கள், கொட்டகைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானங்களும் படிப்படியாகக் கழற்றப்பட்டு, அகற்றப்பட்டன.

இந்நிலையில், கோட்டா கோ கம போராட்டக்களத்தில் எஞ்சியிருந்த கூடாரங்கள் இன்று வெள்ளிக்கிழமை முழுமையாக அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...