‘கோட்டா கோ கம’ வில் எஞ்சியிருந்த கூடாரங்களும் அகற்றப்பட்டன

371

கொழும்பு, காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தில் எஞ்சியிருந்த கூடாரங்கள் அனைத்தையும் பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினர் இணைந்து அகற்றியுள்ளனர்.

கொழும்பு, காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’வில் இருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் கடந்த 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்கள், கொட்டகைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானங்களும் படிப்படியாகக் கழற்றப்பட்டு, அகற்றப்பட்டன.

இந்நிலையில், கோட்டா கோ கம போராட்டக்களத்தில் எஞ்சியிருந்த கூடாரங்கள் இன்று வெள்ளிக்கிழமை முழுமையாக அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here