follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடு’ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டாம்’ : தாய்லாந்து பொலிஸார் அறிவுறுத்தல்

’ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டாம்’ : தாய்லாந்து பொலிஸார் அறிவுறுத்தல்

Published on

தாய்லாந்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அவர் தங்கியுள்ள ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டாம் என பாங்காக் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி பேங்காக் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர் பயணித்த விமானம் தாய்லாந்தின் ஃபூகெட்டில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் பாதுகாப்பு காரணங்களால் விமானம் முவாங் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாகவும் பாங்காக் போஸ்ட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

முவாங் சர்வதேச விமான நிலையத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷ வந்தடைந்த பின்னர், தாய்லாந்து பாதுகாப்புப் படையினர் அவரை பாங்காக்கில் உள்ள ஒரு அறியப்படாத ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் தாய்லாந்து பாதுகாப்புப் பணியாளர்கள் சிவில் உடையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தித்தாளில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...