follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுபரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நிதி

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நிதி

Published on

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸினால் வழங்கப்பட்ட மூன்றரை கோடி ரூபா பணத்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் இதன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக
கொழும்பு மறைமாவட்ட பங்கின் ஊடகப் பணிப்பாளர் அருட்தந்தை கிருஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதி கலாநிதி பிரையன் உடைக்வா ஆண்டகையின் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டனை வத்திக்கானுக்கு சென்றிருந்தபோது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு பரிசுத்த பாப்பரசரினால் ஒரு இலட்சம் யூரோக்கள் வழங்கப்பட்டதாக அருட்தந்தை கூறினார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கும் இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளதாக அருட்தந்தை கிருஷாந்த பெர்னாண்டோ கூறினார்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கடந்த ஏப்ரல் மாதத்தில் வத்திகான் புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசை சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...