follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

Published on

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளின் பொது செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவின் முன்மொழிவுகள் தொடர்பில் கருத்துக்களை கேட்டறிவதற்கும் எதிர்ப்பை வௌியிட்டுள்ள அரசியல் கட்சிகளின் யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் எதிர்காலத்தில் குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்குமே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத சுமார் 50 அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன.

தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவின் முன்மொழிவுகள் தொடர்பில் அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழு, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...