நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் கோளாறு

630

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதற்கட்ட பணிகளில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தற்போது தொழில்நுட்ப செயலணியானது குறைபாட்டை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இரண்டாம் கட்டத்தின் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மூன்றாம் கட்டப் பணிகள் தொடரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதல் கட்டம் பழுதடைந்துள்ளமை திருத்தப்படும் வரை யுகடனவி மற்றும் ஏனைய எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here